BREAKING NEWS

செங்கோட்டை அருகே உள்ள புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. 2 டிரைவர்கள் படுகாயம்!

செங்கோட்டை அருகே உள்ள புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. 2 டிரைவர்கள் படுகாயம்!

 

புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக- கேரள எல்லையான புளியரை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் ‘எஸ்’ வளைவு உள்ளது. அந்த வழியாக நேற்று மாலையில் கேரள மாநிலத்தில் சிமெண்டு லோடு இறக்கி விட்டு தமிழகத்துக்கு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.

 

அப்போது எதிரே கோவில் கொடை விழாவுக்கு வாடகை பாத்திரங்களை ஏற்றிய மினி வேன் சென்றது. புளியரை ‘எஸ்’ வளைவு பகுதியில் சென்றபோது, சரக்கு லாரியும், மினி வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைதடுமாறிய சரக்கு லாரியும், மினி வேனும் மலையில் உச்சியில் இருந்து சுமார் 30 அடி ஆழ பள்ளத்துக்குள் பாய்ந்தது.

 

 

அந்த வழியாக மலையில் அமைக்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் இடையிலான ரயில் தண்டவாளத்தில் தலைக்குப்புற சரக்கு லாரியும், மினி வேனும் விழுந்தன. 

 

இந்த விபத்தில் சரக்கு லாரி டிரைவரான கரூர் மாவட்டம் குளத்தூர் சிந்தாமணிப்பட்டியைச் சேர்ந்த பிச்சையா மகன் வையாபுரி, மினி வேன் டிரைவரான செங்கோட்டை அருகே கற்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். 

 

பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த 2 டிரைவர்களையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 

 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த சரக்கு லாரி, மினி வேனும் ஆகியவற்றை கிரேன் மூலம் மீட்கும் பணி இரவு 8 மணிவரை நடந்தது.

 

இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டத்துக்கு பின் லாரி மீட்கப்பட்டது. மேலும் இந்த விபத்து நிகழ்ந்தபோது ரெயில்வே தண்டவாளம் வழியாக ரெயில் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )