ஜமாபந்தி தொடக்க விழா ஆர்டிஓ தனஞ்செயன் பங்கேற்பு!
ஜமாபந்தி தொடக்க விழா ஆர்டிஓ தனஞ்செயன் பங்கேற்பு!

பேரணாம்பட்டு தாலுகாவில் ஜமாபந்தியை கோட்டாட்சியர் தனஞ் செயன் தொடங்கி வைத்தார்.
பேர்ணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி விழா தொடங்கியது. இந்த ஜமாபந்திக்கு பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார் . குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சா தனஞ்செயன் முன்னிலை வகித்து ஜமாபந்தி யைத் தொடங்கி வைத்தார். இந்த ஜமாபந்தியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் துணை தாசில்தார்கள் சீனிவாசன், இல. வடிவேலு ,பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஒன்றிய ஆணையாளர் ஜி. ஹேமலதா ,வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, தலைமை சர்வேயர் அரி கிருஷ்ணன் ,நகராட்சி கணக்கர் பி .சுரேஷ் ,கிராம நிர்வாக அலுவலர்கள் எம். உதயகுமார் ,என் .ஜெயக்குமார் ,கோபிநாத், வெங்கடேசன், பழனிசாமி, சிவராமன் ,எம் .அருண்குமார், வடிவேலு ,கோவில் ஸ்ட்ரீட் முத்துமாரி, மேகநாதன் ,கிராம உதவியாளர்கள் கோபால், கமலாபுரம் சுரேஷ்குமார், சுகுமார், சுந்தரேசன் ,நாகப்பன், ரத்தினம், குப்புசாமி ,சின்னசாமி, மனோகரன் ,ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
