தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்கள் இன்று காலை கும்பகோணம் அரசினர் ஆடவர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளி வாகனங்கள் இன்று காலை கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் மற்றும் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 36 பள்ளிகளின் 150க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு பள்ளி வாகன ஆவணங்களை துணை போக்குவரத்து ஆணையர் கருப்பசாமி, மாவட்ட கல்வி அதிகாரி சண்முகநாதன், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்கும் வழிமுறைகளை வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை மூலம் செய்து காட்டினர். முன்னதாக அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்
