தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ குட்கா பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் முத்தாண்டிபட்டி பிரிவு சாலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் இன்றி சாலையோரமாக வெள்ளை நிறகார் ஒன்று நிற்பதை பார்த்தனர். உடனடியாக போலீசார் காரை சோதனை செய்தனர்.
காரில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை
பார்த்தனர். அதன் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 170 கிலோ எடை கொண்ட குட்கா என்பது தெரிய வந்தது .
காரையும் காரில் இருந்த குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த செங்கிப்பட்டி போலீசார் குட்கா யார் கொண்டு வந்தது? இந்த கார் யாருடையது? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS குற்றம்செங்கிப்பட்டி போலீசார்தஞ்சாவூர் மாவட்டம்தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்