BREAKING NEWS

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்டவர் கைது.

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்டவர் கைது.

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்ட சிசிடிவி காட்சிகள்.

 

 

ரகளையில் ஈடுப்பட்ட 3 பேரை தஞ்சை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

தஞ்சை கீழவாசல் ஏ.ஒய்.ஏ நாடார் சாலையில் அரசு அனுமதி பெற்ற மதுபான பார் செயல்பட்டு வருகிறது இந்த பாருக்கு வந்த 3 பேர் தீபாவளி மாமுல் கேட்டு கடை உரிமையாளரையும்,

 

ஊழியர்களையும் மிரட்டி உள்ளனர். மாமுல் தர மறுத்ததால் கோபம் அடைந்த 3 பேரும் மதுபான பாருக்குள் நுழைந்து பீர்பாட்டில்களை வீசி, இரும்பு தடுப்புகளை உடைத்து, பார் ஊழியர்களை திட்டி ரகளையில் ஈடுப்பட்டனர்.

 

 

இது தொடர்பாக பார் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர் கீழவாசல் பகுதியை சேர்ந்த ஆனந்த், விஜய், அதிபன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )