தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்வில் சரஸ்வதி சிலை வைத்து சிறப்பு பூஜை.

விஜயதசமியை முன்னிட்டு, தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்வில் சரஸ்வதி சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,


குழந்தைகள் நெல்லில் அ எழுதி தங்கள் பள்ளி கல்வியை தொடங்கினார்கள்
தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு, வித்யாரம்பம் நடந்தது.

சரஸ்வதி சிலை பாதத்தில் ஒலைச்சுவடி வைத்து. நெல். பழங்கள், பூக்களுடன் பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து குழந்தை விரலை பிடித்து நெல்லில் ஓம் கணபதியே நமஹ எனவும் அ என எழுதி குழந்தைகள் பள்ளிக்கல்வியை தொடங்கினார்கள்.
CATEGORIES தஞ்சாவூர்
