BREAKING NEWS

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி.கமலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இக்கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தெரிவித்தார்.

 

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பேரூராட்சி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை துரிதமாக செயல்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

 

முன்னதாக, கடந்த வாரம் தரங்கம்பாடி மீனவர்களை இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட கண்டித்து பேரூராட்சியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

தொடர்ந்து தரங்கம்பாடி மீனவர்கள் பாதிப்பை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்ததை பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். முடிவில் பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS