BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் திடீரென மயங்கி விழுந்தார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லுாரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நடைபெற்றன. இதையொட்டி, அங்கு பாதுகாப்புப் பணிக்காக 900 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிபும் பெண் காவலர் விஜயலட்சுமி என்பவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனே, சக காவலர்கள் அவரை மருத்துவக்குழுவினரிடம் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். கடும் வெயிலில் பெண் காவலர் நீண்ட நேரமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )