BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சியில் வாழ்வின் உயிர்ப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டி.

திருச்சி டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 3நாட்கள் ஓவியக் கண்காட்சி இன்று ரம்யாஸ் ஹோட்டலில் துவங்கியது.

கொரொனா பெருந்தொற்று
காலங்களில் ஓவிய மாணவர்கள் வாழ்வின் உயிர்ப்பு தலைப்பில் முப்பத்தி எட்டு மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை வரைந்துள்ளார்கள்.
அந்த ஓவியங்களை காட்சி படுத்தினார்கள். ஓவியக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. கண்காட்சியினை
டைரிசகா, ஓவியர் சிவபாலன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

ஓவியங்கள்
பல்வேறு வகையான
எண்ணெய் ஓவியம்
(Oil painting) ,
வண்ணக்கோல்
(Pastel painting) ,
செயற்கை வண்ணக் கூழ்மங்கள்
(Acrylic painting),
நீர்வர்ண ஓவியம்
(Watercolor painting),
மை ஓவியங்கள்
(Ink Painting),
பூச்சு ஓவியங்கள் (Enamel painting)
என
வண்ண
கலவை பகுதியில் கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவினை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர். அது படைப்பாளியின் அணுகுமுறையினை
கருத்தியலை எடுத்துரைத்தது.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டியும் நடைபெற்றது.

இதன் பரிசளிப்பு விழாவில் கவிஞர் நந்தலாலா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிகேட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்திருந்தனர். பொதுமக்கள் அனைவரும்
காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை
ஓவியக் கண்காட்சியை இலவசமாக கணலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )