தலைப்பு செய்திகள்
மக்களுடைய கோரிக்கைகளை ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் என கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேச்சு.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்தார். அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார்.
பிரச்சாரத்தில் எம்பி கனிமொழி பேசுகையில் :
இது மகளிருக்கான ஆட்சி மகளிருக்கு முதலிடம் தரக்கூடிய ஆட்சி அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகர்ப்புற மற்றும் டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவித்து அதை செயல்படுத்தி கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் பெண்களுக்கு அரசு பணிகளில் 40 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்து அதை செயல்படுத்தி கொண்டிருப்பது திமுக ஆட்சி
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா இல்லை செல்போன் கொடுப்போம் என்றார் கொடுக்கவில்லை
அனைத்து இடங்களில் wi fi வசதி செய்து தரப்படும் என கூறினார்கள் கொடுக்கவில்லை
சிலிண்டர் விலையை குறைக்க வேண்டியது மத்திய பாஜக அரசு தான் அவர்கள் பின்னாடி வருவார்கள் அவர்களிடம் கண்டிப்பாக நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் இருந்தாலும் தமிழக முதல்வர் இதுகுறித்து மத்திய அரசிடம் கடிதம் எழுதியுள்ளார் விரைவில் சிலிண்டர் விலையை குறைக்கக் கூடிய இடத்திற்கு நாம் விரைவில் வருவோம் இரண்டாண்டுகளில் தேர்தல் வருகிறது அந்த இடத்திற்கு நாம் வருவோம்.
தமிழகத்தில் முதல் முறையாக ஒரு எழுத்தாளருக்கு (கி. ராஜநாராயணன்) மரியாதை வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் அதுவும் அவருக்கு சிலை வைத்து மணிமண்டபமும் அமைக்க ஏற்பாடு செய்தது திமுக ஆட்சியில் தான்
மக்களுடைய கோரிக்கைகளை ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் போராடக் கூடியவர்கள் திமுக என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.