திண்டுக்கல் -நத்தம் சாலைப் பகுதிகளில் ஒளிரும் பட்டை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பாக குற்றம் சாட்டு

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வழியாக மதுரை செல்ல 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை அருகே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. சிறு சாலை அமைக்கும் பணிகள் சில இடங்களில் நடந்து வருகின்றன. மேலும் சில இடங்களில் ஒளிரும் பட்டைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாக வாகனஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பூரில் இருந்து சர்க்கஸ் பொருட்கள் ஏற்றிக்கொண்டு காரைக்குடிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு சமயத்தில் நத்தம் அருகே மெய்யனம்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ராஜசேகர்(45) அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.
இப்பகுதியிலும் ஒளிரும் பட்டை இல்லாததே விபத்துக்கு காரணம் என்றும், இதே இடத்தில் ஏற்கனவே 3 விபத்துகள் நடந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாலைகளின் வளைவுகள், சென்டர் மீடியன் உள்ள பகுதிகளில் ஒளிரும் பட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.