BREAKING NEWS

திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

 

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 7.12.2002 மாலை 5.30 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வி.என். நகரில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 

இக்கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் ஆக்க பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

 

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி சேர்மங்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )