BREAKING NEWS

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க  ஒன்றிய செயலாளர்கள்  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

 

 

திருப்பனந்தாள் மேற்கு, கிழக்கு, மத்தியம் என மூன்று ஒன்றிய பதவிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கோ.க அண்ணாதுரை,கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் பொறுப்பு ஏற்றுகொண்டனர்.

 

இதனையடுத்து தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தலைமையில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று திருப்பனந்தாள் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பாலகுரு, நகர செயலாளர் சப்பானி, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், அழகர்,திமுக நிர்வாகிகள் குமார், சண்முகம், ஊராட்சி செயலாளர்கள் பேரூராட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )