BREAKING NEWS

துரை வைகோ அரசியலில் ஒரு கத்துக்குட்டி என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி..

துரை வைகோ அரசியலில் ஒரு கத்துக்குட்டி என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றது.சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமையில் பொறியாளர் சந்தனராஜ், அஜந்தா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சுல்தான் அலாவுதீன், கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா ஆகியோர் முன்னிலையில்,..

 

 

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

 

நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,வர்த்தக அணி பிரிவு காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி, உள்ளிட்ட சொர்ணா கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில்:

ஒபிஎஸ் தனிக்கட்சி துவங்கி பாருங்கல் என சவால் விட்டு இருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிபாடு எடப்பாடி தனி கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. பொது குழுவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீரித்து உள்ளது.

 

 

பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறியுள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக. அதிமுகவில் இருந்து விலக்கபட்டர்வர்கள் மாவட்ட செயலாளர் கூட்டமோ, கூட்டணி குறித்து பேசுவதற்கு அவர்கள் தனிபாதையை நோக்கி செல்வதற்கு வழி வகுக்குமே தவிற அவர்கள் நடத்தும் கூட்டம் அதிமுகவை கட்டுபடுத்தாது.

 

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுபன்றிகளால் பயிர்கள் சேதம் அடைந்து வருவதாகவும் இது குறித்து தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் எதுவும் செய்யவில்லை என துரை வைகோ பேசுவது பற்றி பேசுவது தற்போதைய ஆட்சியாளர்களின் கைக் கூலியாக செயல்படுகிறார்.

 

 

வில்லிசேரி பகுதியில் பொது உடமையாக்கப்பட்ட அரசு வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்பகுதி மக்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடியிடம் தெரிவித்தனர். தற்போது மதிமுக பொது செயலாளர் வைகோ கொண்டு வந்தாக கூறுவது ஏமாற்று வேலை அவருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்னை பற்றி தொகுதி மக்கள் நன்கு அறிவீர்கள். துரை வைகோ அரசியலில் கத்துக்குட்டி என்றும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS