தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர் திருச்சி அருகே ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவு பெற்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை விட்டதை தொடர்ந்து தனது சொந்த ஊரான அரியநாயகிபுரத்துக்கு உறவினர் காரில் வந்து கொண்டிருந்தார்.
கார் சங்கரன்கோவில் பாட்டத்தூர் கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மரத்தில் மோதியது இவ் விபத்தில் செல்லத்துரை மனைவி அய்ய புஷ்பம் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் காரை ஓட்டி வந்த அருணகிரி சாமி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நகர் காவல் துறையினர் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
மேலும் விபத்தில் பலியான அய்ய புஷ்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.