BREAKING NEWS

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டிய “மக்கள் நலப்பணியாளர்” என்ற பெயரில் பணி வழங்க வலியுறுத்தி மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பெயர் சூட்டிய “மக்கள் நலப்பணியாளர்” என்ற பெயரில் பணி வழங்க வலியுறுத்தி மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் முன்பு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதியவன் தலைமையில் ஆர்ப்பாட்டன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 7,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், தற்போது 5,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இதனை மாற்றி அமைக்க வேண்டும். முன்னாள் அதிமுக ஆட்சியில் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பணி நியமனம் செய்ய வேண்டாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டிய மக்கள் நலப்பணியாளர் என்ற பெயரிலேயே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )