தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெய்பீம் புரட்சி புலிகள் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில்,
ஜெய்பீம் புரட்சி புலிகள் கட்சி சார்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக பணி செய்யும் பொறுப்பாளர்களான தலித் தலைவர்களுக்கு ஏற்படும் கொலை முயற்சிகளில் இருந்து தங்களை பாதுகாக்க துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கிட கோரியும்,
ஜெய் பீம் புரட்சிபுலிகள் பொதுச் செயலாளர் பிரபாகரன் அவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஜெயிபீம் புரட்சிப்புலிகள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி