BREAKING NEWS

நூதன முறையில் தாரதப்பட்டை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர்…

நூதன முறையில் தாரதப்பட்டை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர்…

 

கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது

கரடிபட்டியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் டீக்கடையில் டீ அருந்தி தாரதப்பட்டை அடித்து தீவிர வாக்கு சேர்ப்பில் ஈடுபட்டார் அப்பகுதி

பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர். அப்போது பொதுமக்களுடன் பேசிய முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த ஐந்தாண்டுகளில் கரூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையும் கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டினார் மேலும்

கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவகுமார் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி கரூர் பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு தேர்தல் நிதி உதவி அளித்ததாக குற்றம் சாட்டினார்.

Share this…

CATEGORIES
TAGS