BREAKING NEWS

பவானியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் அத்யாசிய பொருட்கள் விலை உயர்வு செய்த திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி. கருப்பணன் தலைமை வகித்தார். பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், நகரச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் பால் விலை மின்கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு காலி இடம் வரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்றிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பணன் திமுக அரசு பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு காலி இட மனை வரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் குறித்து விளக்கிப் பேசினார்.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், பவானி நகராட்சி முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன் மற்றும் பவானி அம்மாபேட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )