பவானியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் பவானி எம்.எல்.ஏ.கருப்பணன் ஆய்வு செய்து ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் ஒரு பகுதியாக பவானி அருகில் உள்ள தொட்டிபாளையம் கிராமம் மற்றும் பவானி நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பவானி எம்எல்ஏ கருப்பணன் சம்பவ இடம் சென்று அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் ஆறுதல் கூறி ரூ 10 லட்சம் மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தங்களுக்கு ரூ. 80 ஆயிரத்திற்கு வழங்கப்படுகிறது.
அந்த வீட்டினை விலைக்கு வாங்கி பயன் படுத்தி கொள்ள வோண்டுகோள் விடுத்தார். இதில், பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,
முன்னால் நகர் மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆன எம்.ஜி. நாத் (எ) மாதையன், கராத்தே பெரியசாமி, பிரகாஷ், பிரபாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.