பிரசித்தி பெற்ற உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிவாலயம் திருச்சி உறையூர் அருள்மிகு காந்தியம்மை உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமி திருக்கோயில். உதங்க முனிவருக்கு சிவபெருமான் ஒவ்வொரு காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சியளித்ததால் ஐவண்ணப்பெருமான் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைக்கப்பட்டார்.

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புவாய்ந்த பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பெருவிழா உற்சவம் ஆண்டுதறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதியன்று முகூர்த்தகால் நடப்பட்டு விருச்சிக லக்கனத்தில் கொடியேற்ற்றப்பட்டதைத் தொடர்ந்து தினசரி சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்பிரகாரங்களில் வலம்வரும் வைபவம் இனிதே நடந்தேறியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருத்தேரில் பஞ்சவர்ணேஸ்வரர், காந்தியம்மை சமேதராக எழுந்தருளினார். தொடர்ந்து பூஜைகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வடத்தினைப் பிடித்து இழுத்துச் வழிபட்டனர்.


தேர் நிலையை வந்டைந்தபின்னர் அங்கு பக்தர்கள் சூடமேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர்.
வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
