BREAKING NEWS

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாட்டு மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாட்டு மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரி குறைப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மக்களின் நலனே எங்களுக்கு முதன்மை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பல துறைகளில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

மக்களுக்கு பொருளாதாரச் சுமையிலிருந்து நிவாரணம் அளிக்கும். உஜ்வாலா யோஜனா திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவியுள்ளது. உஜ்வாலா சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பு பெண்களின் குடும்ப பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )