BREAKING NEWS

பேரணாம்பட்டில் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்ககவுன்சிலர் அப்துல் ஹமீத் காவல் நிலையத்தில் புகார்.

பேரணாம்பட்டில் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்ககவுன்சிலர் அப்துல் ஹமீத் காவல் நிலையத்தில் புகார்.

 

பேரணாம்பட்டு நகராட்சியில் நகரமன்ற உறுப்பினராக வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் இவர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில் அவர் கூறியிருப்பதாவது பேரணாம்பட் பேருந்து நிலையத்தில் நுழையும்போது கவனக்குறைவாகவும் அதிக ஒலி சப்தத்துடனும் ஒலி எழுப்புவதும் மேற்கொண்டு அதிக சப்தத்துடன் சினிமா பாடல்களை வைத்துக்கொண்டு செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை ஓட்டுவதும் அதிக பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் ஆட்டோவை ஓட்டுவதும்,

 

பத்து பதினோரு வயது நிரம்பிய சிறுவர்கள் ஆட்டோவை ஓட்டுவதும் நெடுஞ்சாலைகளில் ஷேர் ஆட்டோக்களால் சாலையோரம் நடந்துச்செல்லும்பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூடமாணவ மாணவிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

 

மேலும் எந்த ஒரு செய்கையும் இல்லாமல் ஆட்டோவை நடுரோட்டில் நிறுத்திவிடுவதும் திடீர் என்று நிறுத்தப்பட்ட ஆட்டோவை பின்னோக்கி இயக்குவதும் இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி கீழே விழுவதும் போன்ற நிலமைகள் ஏற்படுகிறது. என்றும்..

 

பேரணாம்பட்டு காவல் நிலை ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    சையது தப்ரேஸ் அகமத் 3 years

    அண்ணன் அப்துல் ஹமீத் அவர்களுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நீங்கள் செய்தது மிகவும் 100% சரி யான விஷயம் செய்திருக்கிறீர்கள் இந்த ஆட்டோக்காரர்கள் அடிக்கடி பொதுமக்களுக்கு சாலையில் போய்க் கொண்டே இருக்கும்போது திடீர்னு நிக்கிறது அது மட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கு ரொம்ப நெரிசல் தொந்தரமாக தருகிறார்கள் நீங்கள் செய்தது மிகவும் சரியானவது இந்த பேரணாம்பட்டு காவல் நிலையம் இந்த புகாரை ஏற்றுக்கொண்டு அதுக்கு தகுந்த மாதிரி அதற்குத் தகுந்த மாதிரி பதிலளிக்க வேண்டும்…

  • Disqus ( )