BREAKING NEWS

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சார்பாக மாலை 5.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திரையரங்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிருத்தம் அருகில் கண்டன ஆர்பாட்டம் புறநகர் மாவட்ட தலைவர் எம்.கேபீர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் எம்.எஸ்.சிராஜ் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட பொருளாளர் ஏர்வை இளையாராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனார். மணிப்பூரில் நடந்த நிகழ்வினை குறித்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்த மெத்தன போக்கை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியின் வேளாண் அணி மாநில தலைவர் மானூர் ஷேக் அப்துல்லா, அம்பை வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஷேக் மீரான் மிஸ்பாஹி, விசிக கரிசல் சுரேஷ், ஆகியோர்கள் கண்டன உரை நிகழத்தினார்.

இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பாலாஜி உட்பட ஆகியோர்கள் கண்டன கோசங்கள் முழக்கம்மிட்டனர், இதில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியில் வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில் நன்றியுரையாற்றினார்.

Share this…

CATEGORIES
TAGS