மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ 1கோடி மோசடி.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 1கோடி 26லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது – ஆட்சியர் அலுவலகத்திலயே 28நபர்களுக்கு இன்டர்வியு நடத்திய பலே மோசடி கும்பல்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சமையல் காண்ட்ராக்டர் பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செக்கானூரணியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் சேகரை சந்தித்து பேசியபோது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளரான பாண்டியராஜன் என்பவரை தனது நண்பர் ரஞ்சித்குமாருக்கு நன்கு பழக்கமானவர் என கூறியதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைய காலிபணியிடங்கள் இருப்பதால் உங்கள் பிள்ளைகளை அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
