மாண்டாஸ் புயல் தாக்குதல்.. மறைமலைநகர் அருகே 6மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன..
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
மாண்டாஸ் சூறாவளி தாக்குதல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 68 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின்கம்பங்களும் விழுந்தன.
மேலும் மறைமலைநகர் அருகே பேரமனூர் பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை
யொட்டி இருந்த 6 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. சாய்ந்திருந்த மின் கம்பங்களை கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாய்ந்த மின்கம்பங்களை அகற்றி சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று காலை நிலவரப்படி இதுவரை மாவட்டத்தில் 68 மரங்கள், 8மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
6குடிசைகள் 3படகுகள் சேதமடைந்துள்ளன. 6கால்நடைகள் உயிரிழந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
CATEGORIES செங்கல்பட்டு