மின் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடுமையான மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்ப்பது, மக்கள் விரோத போக்கினை நாள்தோறும் கடைபிடித்து வரும் திமுக அரசை கண்டித்து,
தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு உள்ள புரட்சி தலைவர் எம்,ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா சிலை அருகில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,
திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.காரத்திகேயன், கழக சுற்றுச் சூழல் மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நல்ல துரை,
தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் மா.சாகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.