`முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகம்’- டி.டி.வி.தினகரன் ஆதங்கம்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், “பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்?. இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன் அப்படியென்றால் திமுக-வும் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றதான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்