முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், நகர கழக செயலாளர் சதாசிவம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேந்திரன்,நகர மன்ற உறுப்பினர் ஜஹீர்அஹமத், சங்கர், நகர துணைச் செயலாளர் கோவிந்தன்,
நகரப் பொருளாளர் தன்ராஜ் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் பாரதிதாசன், குமார்,செல்வராஜ் ரபிக் அஹமது லிங்கநாதன் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்