BREAKING NEWS

மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டலின் படி, திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.தமிழ் தரணி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேலூர் மாநகர இளைஞரணி தலைவர் அ. பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் நோக்க உரையாற்றினார்.

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந. தேன்மொழி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் ந. சந்திரசேகரன் கண்டன முழக்கம் சொல்ல தோழர்கள் அனைவரும் கண்டன முழுக்கமிட்டனர்.

மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் உ.விஸ்வநாதன், பெருந்தொண்டர்கள் கு. இளங்கோவன், இரா.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, பொதுக்குழு உறுப்பினர் ச. கலைமணி, மகளிர் அணி ச. ஈஸ்வரி, மாநகரச் செயலாளர் அ. மொ.வீரமணி, மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் க. சையத் அலிம், மாவட்டத் துணைத் தலைவர் க.சிகாமணி, மாவட்டத் துணைச் செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் மா. அழகிரிதாசன், வேலூர் திராவிடர் கழக நெ.கி. சுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் பெ. இந்திராகாந்தி, குடியேற்றம் நகரத் தலைவர் சி. சாந்தகுமார், மாநகர மகளிரணி தலைவர் வீ.பொன்மொழி, பகுத்தறிவாளர் கழகம் ஆ.துரைசாமி, மாணவரணி வி. சி. சங்கநிதி, லோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக வேலூர் மாநகர மாணவரணி தலைவர் பி. யுவன் சங்கர் ராஜா நன்றியுரை ஆற்றினார்.

Share this…

CATEGORIES
TAGS