முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.
திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு,..
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் மதிப்பிற்குரிய திரு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு பெரிய கருப்பன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்
இதில் முன்னாள் சபாநாயகர் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஆவுடையப்பன் அண்ணாச்சி அவர்களும், துணை மேயர் கே. ஆர் ராஜு அவர்களும்,
மண்டல சேர்மன்கள் , மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி