BREAKING NEWS

ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

கோவில்பட்டி அருகே பாலாஜி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை சிறப்பு விழா நடைபெற்றது.

 

 

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,  செண்பகமூர்த்தி,வள்ளியம்மாள் மாரியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமர்,

 

 

 

 

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ஸமேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி இணை செயலாளர் ராமலட்சுமி, அதிமுக நிர்வாகிகள் மனோகரன், அழகர்சாமி, கோபி, முருகன், பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )