ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை.

தேனி மாவட்டம், பெரிய குளம் நகராட்சி வடுகபட்டி சாலையில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகப்பேறு மைய வளாகத்தில், தேசிய நகர்ப்புற நல்வாழ்வு குழும திட்டம் 2021- 2022 ன் கீழ், ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டது.

இதனையடுத்து, கட்டுமானப் பணிக் கான பூமி பூஜை , பெரிய குளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, உடன் இருந்தனர்.
CATEGORIES தேனி
