விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
நிலக்கோட்டை தேமுதிக சார்பாக கட்சி நிறுவன விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக நிறுவனரும்,கட்சித் தலைவருமான விஜயகாந்த் தற்போது உடல் நலம் சீராகும் பெருட்டு நிலக்கோட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை செய்தும்
மற்றும் புத்தாண்டு கேக் வெட்டியும், கட்சி நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கியும், .
தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை பேரூர் செயலாளர் முருகன், அவைத்தலைவர் நம்பிராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனி, ஒன்றிய பெருளாளர் ராஜபாண்டி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் துனைச் செயலாளர் மாசாணம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஒன்றிய பொறுப்பாளர்கள் பாண்டியராஜன்,
அய்யர்பாண்டி,ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயளாலர் சுப்பிரமணிஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயகுமார், ரெங்கசாமி, மாவட்ட கேப்டன் மன்றச்துனைச் செயலாளர் அழகர்சாமி வத்திலக்குண்டு பேரூர் செயலாளர் ஜெயமாறன், மகளீர் அணி ஒன்றிய நிர்வாகி ராணி மற்றும் கழகத் தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்.