விவசாய உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் தமிழகம்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்றஉறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் சிரமங்களின்றி செய்வதற்குஏதுவாக காவிரி டெல்டா படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில்மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் நீர் வழித்தடங்களில் சுமார் 4418 கிமீ தூரத்துக்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1580 கிமீதூரத்தில் சி மற்றும் டி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணையும் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் இந்தஆண்டு குறுவை சாகுபடியில் 5.20 லட்சம் ஏக்கரும் சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும்சாகுபடி பரப்பு கூடுதலாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி படுகை மாவட்டங்களில் தூர்வாரும் இடங்களைப் பார்வையிட்ட பிறகு திருச்சியில்செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் மனங்குளிரும்அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.
கடந்த ஆண்டில் குறுவையில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் மற்றும் சம்பாவில் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுப்பயிர்கள் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது.
அதே சாதனைகள் இந்த ஆண்டும் தொடரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்வகையில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் ரூ. 61 கோடி மதிப்பில்குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும்செயல்படுத்தப்படும், மேலும் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ. 47 கோடி ஒதுக்கீட்டில் முழு மானியவிலையில் வழங்கப்படும், வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன்நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ. 4 கோடியே 20 லட்சத்திற்குவழங்கப்படும், வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட வேளாண்இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ 6 கோடியே 6 லட்சம்மதிப்பீட்டில் வழங்கப்படும் என்பதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்அறிவித்துள்ளார்கள்.
நீர் வழித்தடங்களில் சிறப்பான திட்டமிடலுடன் நடைபெற்றுள்ள தூர் வாரும்பணிகளாலும், மானிய விலையில் உரங்கள், விதைகள், விவசாய உபகரணங்கள்வழங்கும் திட்டத்தின் மூலமாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதிதலைமையிலான அரசு விவசாய பயிர்கள் உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப்பயணித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
முதலமைச்சர் அறிவிப்புகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.