வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 4:00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமம் சிறப்பு யாகம் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றது. இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே கடலையூர் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பாம்புலி அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் மாவட்ட குழு தலைவி சத்யா,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன்,செண்பக மூர்த்தி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,

அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரச் செயலாளர் சிவகுருநாதன்,மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், கடலையூர் கிளைச் செயலாளர் காளிராஜ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் முருகன், பழனிகுமார்,கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
