ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை

தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா
நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா வசு வருடம் ஆடி மாதம் 14ஆம் தேதி 30/7/2025 புதன்கிழமை தொடங்கி ஆடி மாதம் 23ஆம் தேதி 8 /8 /2025 வெள்ளிக்கிழமை அன்று 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜையும் 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழாவும்,
அம்பாள் அருளால் சிறப்பாக நடைபெற உள்ளது 8 /8/ 2025 வெள்ளிக்கிழமை காலை குற்றால தீர்த்தம் அழைத்து வருதலும், பகல் 9 மணிக்கு மேல் 108 குடம் அபிஷேகம் நடைபெறுதலும், மாலை 4 மணிக்கு மேல் முளைப்பாரி ஊர்வலம்,
இரவு ஆறு மணிக்கு அம்பாள் வீதி உலா நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாரதனையும் சிறப்பு பூஜையும் நடைபெறும் 9/ 8/ 2025 சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் கும்மி பாட்டு, முளைப்பாரி கரைத்தல், மதியம் 12 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும்.
அன்னதானம் ஊர் பொது மக்கள் சார்பாக நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சிறப்பாக விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்