அண்ணாவை மறந்து தஞ்சையில் திமுகவினர் கோஷ்டி பூசலில் ஈடுபட்டனர் மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோஷ்டியினர் தனித்தனியாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை கொண்டாடினர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் தஞ்சையில் திமுக கோஷ்டி வெடித்தது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகர செயலாளர் மேயர் கோஷ்டினர் தனியாகவும்,
சட்டமன்ற உறுப்பினர் கோஷ்டியினர் தனியாகவும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் மேயர் கோஷ்டியினர் பகுதி செயலாளர்மேத்தா தலைமையிலும் சட்டமன்ற உறுப்பினர் கோஷ்டியினர் பகுதி செயலாளர் நீலகண்டன் தலைமையிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு பிரிவினரும் பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஒரு மாலை கூட அணிவிக்காமல் உதயநிதி அமைச்சரானதை கொண்டாடியதை பார்த்த பொதுமக்கள் திமுகவிற்கு ஏன் இந்த நிலைமை என்ன புலம்பியப்படி சென்றனர்.
CATEGORIES அரசியல்