அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை எனவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கூட்டுத் தலைமை என்பது தான் எங்கள் அணியில் நிலைப்பாடு.

தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை எனவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கூட்டுத் தலைமை என்பது தான் எங்கள் அணியில் நிலைப்பாடு என பொதுக்குழு முடிந்து தஞ்சை திரும்பிய வைத்தியலிங்கம் கூறினார்.
அதிமுக பொதுக்குழுவை முடித்து விட்டு தஞ்சை வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு தஞ்சை அருகே மேலவஸ்தாச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒன்றுபட்டு இருக்கவேண்டும் கூட்டுத் தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம் என தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை. பதவிகள் நீடிப்பதாக தெரிவித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மனு தாக்கலுக்கு தான் எனவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை என தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கூட்டு தலைமைதான் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றார். கூட்டுத் தலைமை இல்லை என்றால் அப்போது, அது குறித்து தெரிவிப்பதாக வைத்திலிங்கம் கூறினார்.
