அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானதை தஞ்சையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொது குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை அடுத்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமை தீய சக்தி திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சிக்கு வரும் என அப்போது தொண்டர்கள் தெரிவித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
