அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அதிமுக நகரச் செயலாளர் முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் மற்றும் அம்பாசமுத்திரம் நகர் செயலாளர் மாரிமுத்து சேரன்மகாதேவி நகரச் செயலாளர் மாரி செல்வம் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் பலவேசம் மணிமுத்தாறு சிவன் பாபு வக்கீல் பழனிக்குமார் மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி கூனியூர் மாடசாமி
ஆகியோர் உட்பட,..
அதிமுக ஒன்றியம் மற்றும் நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பொங்கல் பரிசுகளை வழங்கினார்.