BREAKING NEWS

அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.

அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற்து.

 

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தலைமை வகித்தார்.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட கழக இணை செயலாளர் ஜீவானந்தி, மாவட்ட கழக துணைச் செயலாளர் செல்வி, பொருளாளர் செல்லதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பூராசாமி, தங்கமணி, மூர்த்தி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன் வரவேற்று பேசினார்.

 

 

இதில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ், கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை கழக பேச்சாளர்கள் காரை.செல்வம், பி.பழனிசாமி, ஏ.வி.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்

 

இதில் அதிமுகவை சேர்ந்த 27 மூத்த முன்னோடிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வர்த்தக அணி செயலாளர் எம்.கே.குமார் நன்றி உரையாற்றினார்.

 

படவிளக்கம்: திருக்கடையூரில் நடைபெற்ற அதிமுக 51 ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் மூத்த முன்னோடிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )