BREAKING NEWS

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

இதனைத் தொடர்ந்து இன்று அதிமுகவினர் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் தலைமையில் அந்தியூர் அரசு மருத்துவமனை பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் அப்பொழுது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

Share this…

CATEGORIES
TAGS