அந்தியூர் அருகே கஞ்சா வைத்திருந்த நபர் கைது.

அந்தியூர் அருகே உள்ள கரட்டூர் மேடு பகுதியில் அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார் இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் சென்னியப்பன் என்றும் அவர் குப்பாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
CATEGORIES Uncategorized