BREAKING NEWS

அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது: சேலம் பறிமுதல்.

அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது: சேலம் பறிமுதல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது ஒருவர் தலைமறைவு ஒரு கார் 4 இருசக்கர வாகனங்கள் பணம் ரூபாய் 7730 பறிமுதல்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் கொண்டயம்பாளையம் பகுதியில் சேவல் வைத்து சூதாடி வருவதாக அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்த ஏழு பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

 

விசாரணையில் அவர்கள் கவுந்தப்பாடி குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் பரணிதரன் சண்முகானந்தம் சம்பத் கவுந்தப்பாடி சத்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ஜோதிஸ்வரன் கார்த்திக் குமார் அபிஷேக் ஆகியோர் என தெரிய வந்தது.

 

அவர்களிடம் இருந்து கார்.1 மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பணம் 7730 இரண்டு கோழி சேவல்களை பறிமுதல் செய்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )