அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை அவரது குடிசை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் எரிந்து கொண்டிருந்த குடிசையின் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார் எரிந்த குடிசையை பார்வையிட்டு சேத மதிப்பு குறித்து வருவாய் வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். எண்ணமங்கலம் பகுதியில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.