அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

அந்தியூர் அருகே உள்ள கூச்சிக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் கலை நாதன் வயது 24 இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு வந்த கலைநாதன் 11 மணி அளவில் நான் விஷம் குடித்து விட்டேன்.
என தனது அண்ணன் கார்த்திகேயனிடம் சொல்லி உள்ளார் உடனடியாக அவர் கலைநாதனை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில் வரும் வழியிலேயே கலை நாதன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்