BREAKING NEWS

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

தஞ்சாவூர் மாவட்டம், அருந்தவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (18) இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் ஊர் ஊராக சென்று குறி சொல்வதற்காக அந்தியூர் பகுதிக்கு தனது அண்ணன் மற்றும் தாய் மீனாட்சி ஆகியோருடன் வந்து அந்தியூர் மந்தை மாரியம்மன் கோவில் பகுதியில் தங்கியிருந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை கார்த்தி குளிப்பதற்காக அந்தியூர் வெள்ளித்திருப்பூர் ரோட்டில் உள்ள பெரிய ஏரி பகுதிக்கு சென்றுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் கார்த்தியை காணாததால் தாய் மீனாட்சி மற்றும் அண்ணன் குடும்பத்தார் அப்பகுதிக்கு சென்று தேடி உள்ளனர்.

 

 

அப்பொழுது கார்த்தி வெள்ளி திருப்பூர் ரோட்டில் பெரிய ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்த உடனடியாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ஏரியில் பிணமாக மிதந்த கார்த்தியை பிரேதத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )