அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் திறந்து வைத்தார்

ஒரு கோடியே 20 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்,
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்களுக்கு கீழ்த்தளத்திலேயே அறுவை சிகிச்சை செய்யும் அறுவை சிகிச்சை மையம்,
மற்றும் பின் கவனிப்பு வார்டு ஆகியவற்றை இன்று தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமார் உறைவிட மருத்துவர் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அமைச்சர் கீதா ஜீவன்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை