அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று திடீரென ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் நோயாளிகள் உட்பிரிவு நோயாளிகள் மகளிர் பிரிவு மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இசக்கி சுப்பையா ஆய்வு செய்தார்.
அவருடன் மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன் பாபு மற்றும் மின்னல் மீனாட்சி ஆகியோர் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
ஆய்வு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நிருபர்களிடம் கூறும் போது,
நாய் கடிக்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 10 பேரில் 5 பேர் நாய் கடிக்கு சிகிச்சை எடுப்பதாகவும் போதிய மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைஅம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையாஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்